Monday, June 28, 2021

சமீபத்தில் ஒரு ஜப்பானிய படம் பார்க்க நேர்ந்தது........... யதார்த்தமாக பார்க்க ஆரம்பிக்க படம் அற்புதமாக இருக்கவே தொடர்ந்து பார்த்தேன்......... இயற்கையை அழித்து புதிய சக்திக்களை கண்டுபிடித்து விட்டதாக எண்ணி செருக்கு கொள்ளும் மனித இனத்திற்கான பாடம் இந்த படம். ஒரு ஜப்பானியனின் கனவுகளில் செயற்கை சக்திகளால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விளக்குவதாக அமைந்துள்ளது படம். அவன் காணும் மூன்று வெவ்வேறு கனவுகள்தான் இந்த படம். கனவு : செயற்கை உரங்களை பயன்படுத்தி பயன்படுத்தி நிலங்கள் அனைத்தும் நச்சு தன்மையுள்ளதாகி போகிறது. கனவு காணும் நபர் ஏதோ வேற்று கிரகத்தில் உள்ளதை போல உணர்கிறார். கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்களோ மரம் செடி கொடியோ கண்ணில் படவில்லை. வெகுதூரம் நடந்த பின்னர் ஒரு விகாரமான் மனிதனை காண நேர்கிறது. அவருடன் பேசுகிறார் நாயகன். உரையாடல் பின் வருமாறு: நாயகன்: நீங்கள் யார்? அ.நபர்: நானும் மனிதன்தான்........ நாயகன்: நீங்கள் ஏன் இப்பட இருக்கிறீர்கள்? அ.நபர்: எல்லாம் இந்த புத்தி கெட்ட மனிதர்களின் கண்டுபிடிப்பால் வந்தது......... நாயகன்: ஏன்? அ.நபர்: ஆம்..... எல்லாம் அவர்கள கண்டுபிடித்த ரசாயன உரங்களின் விளைவுகள்தான்...... இப்பொழுது இந்த நாடே விஷநிலமாக மாறி பொய் விட்டது...... அந்த உணவுகளை உண்ட மனிதர்கள் என்னை போல் மாறி விட்டனர்...... அனைவருக்கும் தோல் வியாதி, உடல் குறைபாடுகள், உடம்பெல்லாம் சுருங்கி இப்படி அகோரமாகி விட்டனர்....... பெரும்பாலானோர் இறந்து விட்டனர்......... ஒரு காலத்தில் இந்த நாடே அழகாக இருந்தது..... மக்கள் மகிழ்ச்சியாக ஊரெங்கும் பசுமையாக வாழ்ந்தோம்......... எல்லாம ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவு........ இப்பொழுது நாங்கள் நினைத்தாலும் எங்களால் இறக்க முடியாது....... இந்த கொடுமைகளையெல்லாம் அனுபவித்து நொந்துதான் சாக வேண்டும்......... (அப்பொழுது சற்று தூரத்தில் சில மனிதர்களின் மரண ஓலம் கேட்கிறது) நாயகன்: அது என்ன அங்கே சத்தம்? அ.நபர்: மாலை குறிப்பிட நேரமாகி விட்டால் அவர்களின் உடம்பிலுள்ள திசுக்கள் எரிச்சல் தர ஆரம்பிக்கும்...... அரிப்பை நிறுத்த முடியாது...... சொரிந்து சொரிந்து ரத்தம்தான் வரும்...... அனால் இதை தடுக்கவும் முடியாது...... இப்படி செய்து செய்தே மக்களின் ரத்தால் அந்த பகுதியில் ஒரு ரத்த குளமே உறவாகி விட்டது.... இப்பொழுது அதுதான் எங்களுக்கு குடிநீரும் கூட....... நாயகன்: உங்களுக்கும் உந்த வியாதி உண்டா? அ.நபர்: ஆம்..... நீ இங்கிருந்து போய் விடு..... இல்லையென்றால் உனக்கும் இது பரவி விடும்......... நீயாவது பசுமையான ஜப்பானை உருவாக்க பாடு படு.....போ! போ! நாங்கள் செய்த தவறுகளுக்கு நாங்க அனுபவிக்கிறோம்........ நாயகன்: நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்? அ.நபர்: இங்கு நீ பார்க்கிறாயே மனிதர்கள்..... இவர்கள்தான் அந்த உரங்களை கண்டு பிடித்தவர்கள்....... இவர்களைத்தான் இந்த நாடு கடவுளாக பார்த்து........ ஆனால் இவர்கள் இந்த நாட்டையே நரகமாகி விட்டார்கள்....... அதற்கான தண்டனைதான் இது...... மற்ற மக்கள் இறந்தாலும் இவர்கள் இப்படி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருகிறார்கள்....... அந்த உரங்களை கண்டுபிடித்த விஞ்ஞானி குழுவில் நானும் அடக்கம்........

No comments: