Monday, June 28, 2021

டீ கடை

ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத எத்தனையோ விஷயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த டீ கடையும் அதன் பெஞ்சுகளும்.......... மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு டீ கடைகளில் மேல் அழியாததொரு பாசம் உண்டு..... கல்லூரிக்கு போக ஆரம்பித்த நாள் முதல் டீ கடைகள் தான் சொர்க்கம்....... ஒவ்வுறு ஊரிலும், ஏரியாவிலும் ஒரு குறிப்பிட்ட டீ கடைகள்...... அந்த கடைகளில் வளர்ந்தது கற்றது நிறைய உண்டு..... மணப்பாறை வெண்ணிலா டீ ஸ்டால், விநாயகா டீ ஸ்டால், திருச்சி காஜாமலை நாகநாதர் டீ ஸ்டால், தில்லை நகர் விநாயகா டீ ஸ்டால், உறையூர் விநாயகா டீ ஸ்டால், சத்திரம் பேருந்து நிலையம் காயத்ரி டீ ஸ்டால், ஆதம்பாக்கம் பேருந்து நிலையதிருக்கு எதிரே உள்ள டீ ஸ்டால், ஸ்பென்செர் ப்ளாசாவிலுள்ள குட்டி டீ ஸ்டால் என என் வாழ்க்கையோடு எப்பொழுதும் தொடர்புடைய எத்தனையோ டீ கடைகள்...... இந்த கடைகளில் நான் செலவழித்த நேரங்கள் என் வாழ்வின் இனிமையான தருணங்கள்...... நினைத்தாலே இனிக்கும் இனிய நினைவுகள்........ மணப்பாறையில் நண்பர்களுடன் தங்கியிருந்த போது பெரும்பாலான நாட்கள் செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது வழக்கம். ஆனால் படம் முடிந்தவுடன் நான் நேரே போகும் இடம் வெண்ணிலா டீ கடைதான்...... நானும் என் நண்பன் ஜானகிராமனும் கொட்ட கொட்ட பனியில் விழித்து நேரம் போவது தெரியாமல் அந்த சினிமாவை எங்களுக்கு தெரிந்தவரையில் அக்கு வேறு ஆணி வேறாக அலசி எடுப்போம். அந்த டீ கடைகாரரும் எங்களை கேட்காமலே ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு டீ கொண்டுவந்து கொடுத்து விடுவார்...... சில நாட்கள் எங்களிடம் பணமே இருந்ததில்லை ஆனால் அப்பொழுதும் அவர் டீ கொடுப்பதை நிறுத்தியதில்லை..... அவர் முதல் வாங்கிய பால் அடுத்த நாள் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரை தாங்கும. இதில் விசேஷம் என்னவென்றால் முதல் நாள் மாலையில் இருந்து சுண்டிப் போய் அந்தப் பாலின் சுவை கிட்டத்தட்ட பால்கோவா போலிருக்கும். யாரேனும் அந்த நேரத்தில் டீ குடித்திருந்தால் கண்டிப்பாக உணர்திருப்பீர்கள்...... அந்த டீ கடையின் நைட் மாஸ்டர் ஒரு அரை மணி நேரம்தான் தூங்குவார்...... நான்கு மணிக்கும் படுத்தால் நாலரை மணிக்கு எழுந்து விடுவார்.... மீண்டும் அவரது முதல் போனி நாங்கள்தான்...... என்னுடைய முதல் காதலை பற்றி பேசிப் பேசியே பல இரவுகள் உறக்கமின்றி போயிருக்கிறது..... காலை ஐந்து மணிக்கு படுத்து காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எழுந்து தாமதமாக மட்டுமே கல்லூரி சென்று வந்ததுண்டு.......
சமீபத்தில் ஒரு ஜப்பானிய படம் பார்க்க நேர்ந்தது........... யதார்த்தமாக பார்க்க ஆரம்பிக்க படம் அற்புதமாக இருக்கவே தொடர்ந்து பார்த்தேன்......... இயற்கையை அழித்து புதிய சக்திக்களை கண்டுபிடித்து விட்டதாக எண்ணி செருக்கு கொள்ளும் மனித இனத்திற்கான பாடம் இந்த படம். ஒரு ஜப்பானியனின் கனவுகளில் செயற்கை சக்திகளால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விளக்குவதாக அமைந்துள்ளது படம். அவன் காணும் மூன்று வெவ்வேறு கனவுகள்தான் இந்த படம். கனவு : செயற்கை உரங்களை பயன்படுத்தி பயன்படுத்தி நிலங்கள் அனைத்தும் நச்சு தன்மையுள்ளதாகி போகிறது. கனவு காணும் நபர் ஏதோ வேற்று கிரகத்தில் உள்ளதை போல உணர்கிறார். கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்களோ மரம் செடி கொடியோ கண்ணில் படவில்லை. வெகுதூரம் நடந்த பின்னர் ஒரு விகாரமான் மனிதனை காண நேர்கிறது. அவருடன் பேசுகிறார் நாயகன். உரையாடல் பின் வருமாறு: நாயகன்: நீங்கள் யார்? அ.நபர்: நானும் மனிதன்தான்........ நாயகன்: நீங்கள் ஏன் இப்பட இருக்கிறீர்கள்? அ.நபர்: எல்லாம் இந்த புத்தி கெட்ட மனிதர்களின் கண்டுபிடிப்பால் வந்தது......... நாயகன்: ஏன்? அ.நபர்: ஆம்..... எல்லாம் அவர்கள கண்டுபிடித்த ரசாயன உரங்களின் விளைவுகள்தான்...... இப்பொழுது இந்த நாடே விஷநிலமாக மாறி பொய் விட்டது...... அந்த உணவுகளை உண்ட மனிதர்கள் என்னை போல் மாறி விட்டனர்...... அனைவருக்கும் தோல் வியாதி, உடல் குறைபாடுகள், உடம்பெல்லாம் சுருங்கி இப்படி அகோரமாகி விட்டனர்....... பெரும்பாலானோர் இறந்து விட்டனர்......... ஒரு காலத்தில் இந்த நாடே அழகாக இருந்தது..... மக்கள் மகிழ்ச்சியாக ஊரெங்கும் பசுமையாக வாழ்ந்தோம்......... எல்லாம ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவு........ இப்பொழுது நாங்கள் நினைத்தாலும் எங்களால் இறக்க முடியாது....... இந்த கொடுமைகளையெல்லாம் அனுபவித்து நொந்துதான் சாக வேண்டும்......... (அப்பொழுது சற்று தூரத்தில் சில மனிதர்களின் மரண ஓலம் கேட்கிறது) நாயகன்: அது என்ன அங்கே சத்தம்? அ.நபர்: மாலை குறிப்பிட நேரமாகி விட்டால் அவர்களின் உடம்பிலுள்ள திசுக்கள் எரிச்சல் தர ஆரம்பிக்கும்...... அரிப்பை நிறுத்த முடியாது...... சொரிந்து சொரிந்து ரத்தம்தான் வரும்...... அனால் இதை தடுக்கவும் முடியாது...... இப்படி செய்து செய்தே மக்களின் ரத்தால் அந்த பகுதியில் ஒரு ரத்த குளமே உறவாகி விட்டது.... இப்பொழுது அதுதான் எங்களுக்கு குடிநீரும் கூட....... நாயகன்: உங்களுக்கும் உந்த வியாதி உண்டா? அ.நபர்: ஆம்..... நீ இங்கிருந்து போய் விடு..... இல்லையென்றால் உனக்கும் இது பரவி விடும்......... நீயாவது பசுமையான ஜப்பானை உருவாக்க பாடு படு.....போ! போ! நாங்கள் செய்த தவறுகளுக்கு நாங்க அனுபவிக்கிறோம்........ நாயகன்: நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்? அ.நபர்: இங்கு நீ பார்க்கிறாயே மனிதர்கள்..... இவர்கள்தான் அந்த உரங்களை கண்டு பிடித்தவர்கள்....... இவர்களைத்தான் இந்த நாடு கடவுளாக பார்த்து........ ஆனால் இவர்கள் இந்த நாட்டையே நரகமாகி விட்டார்கள்....... அதற்கான தண்டனைதான் இது...... மற்ற மக்கள் இறந்தாலும் இவர்கள் இப்படி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருகிறார்கள்....... அந்த உரங்களை கண்டுபிடித்த விஞ்ஞானி குழுவில் நானும் அடக்கம்........

வேட்டைக்காரன் விமர்சனம்

நேற்று உறவினர் ஒருவரிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. அவர் கேட்டார் "வேட்டைக்காரன் பாத்துட்டியாமே?". "ஆம்" என்றேன். அதற்கு அவர் கூறினார் " இனிமேல் நீ எப்பொழுதும் வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது எங்களிடமோ வழக்கம்போல் உன் கோபத்தை காட்டக்கூடாது. எந்த காரியத்தையும் உடனே செய்ய சொல்லி அவசரப் படுத்த கூடாது.............. தைரியமான முடிவுகள் எடுக்கவும் தாமதிக்க கூடாது!" "ஏன் திடீர்னு இதையெல்லாம் என்கிட்டே சொல்றீங்க?" என கேட்டேன். "இல்ல உனக்கு வேட்டைக்காரன் பாக்குற அளவுக்கு பொறுமையும் தைரியமும் இருக்கப்போ மத்த இடங்கள்ல எப்டி அது இல்லாம போகும்? ...... என்ன நான் சொல்றது சரியா?" "சரீங்க்னா" என்றேன். "ஒரு வேளை சுறா ஹிட் குடுத்தா பாக்கலாம்ல?" என்று கேட்டேன். "சுறா வச்சு வேணும்னா புட்டு தரலாம் ஹிட் குடுக்க முடியாதுடா அம்பி!" னு சொன்னார். "சரி மாமா நான் அப்புறம் பேசுறேன்" என்று சொல்லி வைத்து விட்டேன். வேறென்ன சொல்வது? மக்களின் எண்ணம் விஜய்க்கு மட்டும் ஏன் தெரிய மாட்டேங்குது? இதன் இப்போ மைண்ட்ல ஓடிட்டு இருக்க மில்லியன் டாலர் கேள்வி.

வில்லு - விமர்சனம் அல்ல.

பொதுவாக திரைப்படங்களுக்கு என்னுடைய வலைப்பதிவில் விமர்சங்கள் எழுதியது கிடையாது. ஏனென்றால் எனக்கு ஒரு குறிப்பிட்ட நடிகரை பிடிக்கும் அதனால் என்னையும் அறியாமல் சில விஷயங்கள் ஒரு"தலை" பட்சமாக அமைந்து விட வாய்ப்புகள் உண்டு. மேலும் நான் உண்மையை கூறினாலும் அது ஒரு"தலை" பட்சமாகத்தான் கருத்தில் கொள்ளப்படும். மக்களை சென்றடையவும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் திரைப்படம் ஒரு மிகசிறந்த ஊடகம். குத்துப்பாட்டும் கவர்ச்சியும் இருந்தால்தான் படம் வெற்றியடையும் என்பது மிகவும் தவறான ஒரு கருத்து. நமது இளைய தளபதியிடம் நீண்ட நாட்களாக ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அதாவது வணிக திரைப்படங்கள்தான் வெற்றி பெரும் மேலும் அதுதான் நமக்கு சரிவரும் என. ஆனால் அதுவல்ல உண்மை........ வணிக திரைப்படம் கலைப்படம் என்று பாகுபாடெல்லாம் கிடையாது..... இரண்டே சினிமாதான் உண்டு ஒன்று மக்களுக்கு பிடித்து இன்னொன்று மக்களுக்கு பிடிக்காதது. அதற்காக விஜயை "ஹேராம், அன்பே சிவம், சொல்ல மறந்த கதை, குசேலன், பச்சைக்கிளி முத்துசரம்" போன்ற படங்களில் நடிக்க சொல்லவில்லை. நல்ல கதையுடன் வணிக விசயங்களும் அடங்கிய சேது, முகவரி, காதல் கோட்டை, சந்தோஷ் சுப்பிரமணியம், சுப்ரமணியபுரம், சித்திரம் பேசுதடி, காக்க காக்க போன்ற படங்களில் நடிக்கலாமே!!!!! தொடர்ச்சியாக இல்லையென்றாலும் அவ்வப்பொழுது....... ஏன் அவர் நடித்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரெண்ட்ஸ், பிரியமானவளே, பத்ரி படங்களை விடவா மதுர, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு படங்கள் மக்களுக்கு பிடித்து விட்டது????? நிச்சயமாக இல்லை..... மகேஷ் பாபுவின் தயவால் வந்த கில்லி, போக்கிரி இரண்டு படங்களும் வராமல் இருந்திருந்தால் ஒரு வேலை உணர்ந்திருப்பரோ என்ன என்னவோ? வில்லு படம் வெளியான பின்பு வழக்கம்போல் எங்கள் நண்பர்களுக்குள் காரசாரமான விவாதம் தொடங்கியது. வேற்றுமொழி படங்களை பார்க்காமல் வில்லு முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு படத்தின் முதல் பாதி (மட்டும்) பிடித்திருக்கலாம். ஏனென்றால் இந்த படம் ஆரம்பித்து சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின்புதான் படத்தின் கதை என்ன என்பதை பற்றி பேச துவங்குவார்கள். ஆனால் இந்த ஒரு மணி நேரத்தில் வரும் காட்சிகளில் "அத்தடு" என்ற தெலுங்கு படத்தில் இருந்து ஒரு சண்டை காட்சி, "ஸ்டாலின்" படத்தில் இருந்து ஒரு காட்சி மற்றும் டயலாக்குகள், "சங்கர் தாதா" படத்தில் இருந்து இரண்டு பாடகள், பின் பாதியில் "ஜல்சா" படத்திலிருந்து இரண்டு பாடல்கள், "சோல்ஜர்" படத்தின் கதை இவற்றின் ஒட்டு மொத்த கலவைதான் "வில்லு". இவை அனைத்தும் தெரிந்து இந்த படத்தை பார்த்து பின் வில்லு பார்க்கும் ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும் என யோசித்தால் எனது ஆதங்கம் உங்களுக்கு தெரியும். ஒரு வேளை "அறியாமைதான் இன்பம்......... அறிவது தவறு" என்னும் பழந்தமிழ் கூற்று சரிதானோ????? விஜய் போன்ற நடிகர்கள் இன்னும் எவ்வளவோ நல்ல படங்களில் நடிக்கலாம் என்பதுதான் கருத்தே தவிர அவர் மோசமான நடிகர் என்பதல்ல. எனக்கு இதுதான் சரி வரும் என்று அவர் முடிவு செய்து கொண்டு அவரை அவரே ஒரு வட்டதிருக்கு சுருக்கி கொண்டு இருக்கிறார். ஆனால் அவரால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க முடியும் என்பதே உண்மை. ஓடாத படங்களை வெற்றி படங்களாக கட்டிக்கொள்வதில் அவருக்கு இருக்கும் முனைப்பு நல்ல படங்களின் மீது திரும்பினால் அந்த அவலங்கள் தேவையிருக்காது. சமீபத்தில் நண்பர்களுக்குள் அனுப்பிய மின்னஞ்சல் தொகுப்பில் நண்பர் ஒருவர் சொன்னார் "படம் இருநூறு நாள் ஓடும் ஆனால் மதுரையில் பத்து நாள்தான் ஓடியது சேலத்தில் பதினாறு நாள்தான் ஓடியது என்று நான் கணக்கு சொல்வேன் என்று". அவரை பொறுத்த வரையில் அவருக்கு விஜய் படம் பிடிக்கிறது அவர் கண்களில் நூறாவது நாள் போஸ்டர் தெரிகிறது. அவர்கள் அதற்குமேல் எதையும் தெரிந்து கொள்வதில்லை. உதாரணதிருக்கு "அழகிய தமிழ் மகன்" படம் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. சென்னை ரிலீஸ் உரிமம் பொதுவாக விஜய் கைகளில்தான் இருக்கும் [நூறு நாள் ஓட்ட எளிதாக]. ஆனால் இந்தமுறை பிரமிட் சாய்மீரா அவர்களே ரிலீஸ் செய்தனர். விளைவு படம் ஐந்து வாரங்களுக்கு மேல் ஓடவில்லை. விடுவாரா நம் விஜய் படத்தை எ.ஜி.எஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கி மீண்டும் சாய் சாந்தி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் போஸ்டர் அடித்து பட்டையை கிளப்பினார்கள். அந்த நபருக்காக அவர் ஆசைப்படியே இதோ ஆதாரம்: இதே போல் ஒவ்வொன்றிற்கும் ஆதாரத்துடன் பேச முடியும். ஆனால் இதுவல்ல நமது வேலை. இப்பொழுது மக்கள் முன்பு போல் இல்லை எல்லாவற்றையும் உற்று நோக்க துவங்கிவிட்டார்கள் என்பதையும் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். ஐந்தாவது வாரமே அனைத்து அரங்குகளிலும் ஒரு காட்சிக்கு வந்த திரைப்படம் நூறு நாள் ஓடி வெற்றிகண்ட பெருமை விஜய் அவர்களை மட்டுமே சாரும். சக போட்டியாளர் அஜித் படங்கள் எத்தனையோ ஓடாமல் போயிருக்கின்றன எத்தனையோ ஐம்பது நாட்கள் கடந்து சராசரி வெற்றி பெற்றிருக்கின்றன ஆனா ஒரு போதும் அவர் இது போன்ற செயலை செய்ததில்லை. இது பற்றி அபிராமி தியேட்டர் உரிமையாளர் "அபிராமி ராமநாதன்" அவர்களே கூறியிருக்கிறார். அவர்களது திரையரங்கில் பரமசிவன் திரைப்படம் அறுபது நாட்கள் நன்றாக ஓடி பின்பு கூட்டம் குறைந்தவுடன் அவரே ஒரு காட்சிக்கு மாற்றி நூறு நாள் [லாபம் தந்த படமாதலால்] ஓட்ட முடிவு செய்தபோது அஜித் போன் செய்து ஏன் இப்படி ஒரு காட்சி ஒட்டுகிறீர்கள் ஓடவில்லை என்றால் பரவாயில்லை உங்களுக்கு லாபம் தந்தால் அது போதும் என்று கூறியதாக கூறினார். இப்பொழுது ஏகன் படம் கூட எழுப்பதைந்து நாட்களுக்கு பிறகு விளம்பரம் வரவில்லை. எழுப்பதைந்து நாட்கள் ஓடிய படத்தை நூறு நாள் படமாக மாற்றுவது ஒரு எளிதான வேளை ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படத்தின் தகுதி அவ்வளவுதான் என்பதுதான் உண்மை. இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. வில்லு பார்க்கும் பொழுது ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. விஜய் ஆட சொன்னால் வரிந்து கட்டி கொண்டு நிற்கிறார், காமெடி பண்ண மிகவும் ஆசைப்படுகிறார். ஆனால் கதை என்றால் கௌண்டமணி ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் "டென் ஸ்டெப்ஸ் பேக்". வருத்தப்பட வேண்டிய இன்னொரு விஷயம் [அவரும், மக்களும்] வில்லு என்னுடைய ஐம்பதாவது படமாக இருந்திருக்கலாம் என ஆதங்க படுகிறார். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் சமீபத்தில் சிஃபி.காம் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அடுத்த படத்தின் கதை என்ன என்று ஒரு ரசிகர் கேட்டதிற்கு கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் "ஏறத்தாழ திருப்பாச்சி போன்ற கதைதான்" என்று சொல்லியிருக்கிறார்.

Tuesday, September 14, 2010

கமல்ஹாசன் - நிகழும் அற்புதம்!




வழக்கம்போல் அலுவலகம் வந்தவுடன் ஜி மெயிலில் உள்ளே நுழைந்து புதிய மின்னஞ்சல்களை பார்த்த பொழுது எனது சகோதரனிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் என்னை ஈர்ப்புக்குள்ளாக்கியது. ஏனென்றால் அது நமது பத்மஸ்ரீ கமல்ஹாசனை பற்றியது. அந்த மின்னஞ்சலில் வந்த விவரங்களை கீழ்காணும் முகவரிகளில் நீங்கள் காணலாம்:

http://jackofall.blogspot.com/2005/03/inspired-kamal-hassan.html
http://www.karundhel.com/2010/09/blog-post.html

இந்த வலைப்பதிவுகள் கமல்ஹாசனை பற்றியும் அவரது முக்கியமான பல படங்கள் ஆங்கில மற்றும் பிறமொழி படங்களின் காப்பி என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க
துடித்து கொண்டிருந்தது. உண்மைதான்! அந்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்தபடி அவரது பல முக்கியமான படங்கள் பல்வேறு ஆங்கில படங்களின் தழுவல்கள்தான். ஆனால் இதன் மூலம் கமல்ஹாசன் ஒரு உன்னை கலைஞன் அல்ல என்றும் அவர் வெறும் காப்பி அடிப்பவர்தான் என்றும் நிச்சயமாக ஒத்துகொள்ள முடியாது. முதலில் எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு கமலின் நோக்கம் வெறுமனே காப்பி அடிப்பது மட்டுமல்ல மேலும் அவர் மற்றவர்களை போல சினிமாவை வெறும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதும் இல்லை. காப்பி அடித்து பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் எத்தனையோ வச்சொளை வாரிக்குவித்த வெற்றிப்படங்களை அவர் தழுவி எடுத்திருக்கலாம். ஆனால் அவரது நோக்கம் அவர் பார்த்த உலகத்தரமான படங்கள் தமிழிலும் வர வேண்டும் என்பதுதான். மேலும் எந்த படமும் ஈஅடிச்சான் காப்பி என்று எவராலும் குறிப்பிட முடியாது. அது மட்டுமில்லாமல் அந்த படங்களில் நடிக்க எவராலும் முடியாது என்பது எனது பணிவான மற்றும் திமிரான கருத்து. ஏன் ராஜபார்வை, குணா, நம்மவர் போன்ற படங்களை ரஜினியோ இல்லை மற்ற நடிகர்களோ முயற்சி செய்து பார்க்க வில்லை? ஏனென்றால் இங்கு யாருக்கும் தைரியம் இல்லை. தங்களுக்கென இருக்கும் வியாபாரத்தை கெடுத்து கொள்ள யாருக்கும் துணிவில்லை. அந்த வகையில் பல்வேறு உலகத்தரமான படங்களை இந்திய மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தது கமலுக்கு பெருமைதான். இதில் வெட்கப்படவோ தலை குனிவதற்கோ ஒன்றும் இல்லை. முக்கியமான படங்கள அனைத்தும் காப்பி என்றால் தேவர் மகன், அன்பே சிவம், மகாநதி, ஹேராம், ஒரு கைதியின் டயரி, விக்ரம் இன்னும் எவ்வளவோ படங்கள் எல்லாம் முக்கியமான படங்கள் இல்லையா? இவை எல்லாம் எங்கிருந்து காபி அடிக்கப்பட்டது?. அமெரிக்க சினிமா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் எடுத்தவர் அவர். எத்தனை தோல்விகள் கண்டபின்னும் சோதனை முயற்சிகளை கைவிடாமல் இன்னும் தரமான படங்களை தரத் துடித்து கொண்டிருக்கும் ஒரு உன்னதமான கலைஞனை காப்பி என்ற ஒரு வார்த்தையால் கண்ட சாக்கடைகளோடு ஒப்பிட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்!

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்


மம்மி, இன்டியானா ஜோன்ஸ் போன்ற பிரம்மாண்டமான படங்களை பார்த்து வியந்திருக்கும் எனக்கு அதுபோன்ற படங்களை நம்மாலும் நேர்த்தியுடன் உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்". இனி விமர்சனத்திற்கு வருவோம்........

சோழர்களின் காலத்தில் ஆரம்பிக்கிறது படம். பண்டைய சோழர் - பாண்டியர்களுக்கிடையே நடந்த ஒரு போரின்போது பாண்டியர்களின் குலதெய்வம் சிலை ஒன்றை கவர்ந்து கொண்டு வந்து விடுகின்றனர் சோழர்கள். மீண்டும் சிலகாலம் கழித்து அவர்களுக்கிடையே நடக்கும் போரில் பாண்டியர்களின் கைஓங்கி சோழர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் சோழன் தன் வாரிசான மகனை ஒருவரிடம் கொடுத்து சோழர் குலம் தழைக்கும் பொருட்டு யார் கண்ணிலும் படாமல் வேறு எங்கேனும் கொண்டு சென்று வளர்க்க சொல்கிறான். அவர்களுடன் பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையையும் கொடுத்து அனுப்பி விடுகின்றான்.

அதன் பின்பு வந்த பாண்டிய மன்னர்கள் எவ்வளவோ முயன்றும் சோழ வாரிசு சென்றடைந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இதானால் அவர்களின் குலதெய்வ சிலையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அதன் பின்னர் சில பாண்டியர்கள் சோழ வாரிசு இருக்கும் இடத்தை கணித்து செல்கின்றனர் ஆனால் அவ்வாறு சென்றவர்கள் உயிருடன் திரும்புவதில்லை. ஆனால் அந்த இடத்தை சென்றடயும் விதத்தையும் அதில் இருக்கும் கஷ்டங்களையும் ஓலைச் சுவடிகளில் எழுதி வைக்கின்றனர்.

இதன் பின்பு அந்த இடத்தை தேடி செல்லும் பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் உயிருடன் திரும்புவதில்லை. அந்த வகையில் இப்பொழுது நடப்பு காலத்தில் சென்ற ஒரு அகழ்வாராய்ச்சியாளர் ஒருவரும் காணமல் போகவே அவர் சம்பந்தப்பட்ட அந்த துறையின் உயர் பொறுப்பில் பணிபுரியும் அனிதா [ரீமாசென்] அந்த ஆராய்ச்சியாளரின் மகளுடனும் [ஆண்ட்ரியா] பாதுகாப்பு படையினருடனும் அந்த இடத்தை கண்டறிய புறப்படுகிறார். இவர்கள் மட்டுமில்லாது எடுபிடி வேலைகளுக்காக குப்பத்தில் திரியும் இளைஞர் குழு ஒன்றையும் கூடி செல்கிறார்கள். அந்த குழுவில்தான் நம்ம ஹீரோவும் [கார்த்தி] இருக்கிறார்.
வரைபடம் மற்றும் ஒலைசுவடிகளின் குறிப்புகள் மூலமாக அந்த இடம் வியட்நாம் என்பதை கண்டறியும் இவர்கள் அந்த நாட்டை நோக்கி கப்பலில் பிரயாணம் செய்கிறார்கள். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தீவைத்தான் அந்த சோழன் சென்றடைந்தான் என்று நம்பும் அவர்கள் படகுகள் மூலம் அந்த இடத்தை சென்றடைகின்றனர். ஆனால் கடலில் கரையை ஒட்டி இறங்கிய நொடியே கடலில் உள்ள விஷ மீன்களால் பலர் உயிரிழக்கின்றனர்
இதைப்போல் ஏழு இன்னல்களையும் தடங்கல்களையும் தாண்டிதான் அந்த இடத்தை சென்றடைய முடியும் என்று ஓலை சுவடியை படித்து சொல்கிறார் அன்றியா. அதேபோல் பல்வேறு இடர்களையும் இன்னல்களையும் தாண்டி பகீரத பிரயத்தனம் செய்து ஒரு வழியாக சோழன் இருந்த இடத்தை கண்டறிகின்றனர். அந்த இடத்தை அடைந்தால்தான் தெரிகிறது சோழன் சாகாமல் பல சந்ததிகளை உருவாக்கி அங்கு ஒரு சோழ ராஜ்ஜியமே நடந்து கொண்டிருக்கிறது என்று. ஆனால் அவர்கள் வளமான வாழ்வு வாழாமல் வெளி உலகுக்கே வராமல் வறுமையில் வாடி தவிக்கின்றனர். தற்போதைய சோழ மன்னன் [பார்த்திபன்] இன்னமும் பாண்டியர்கள் தங்கள் சோழ தேசத்தை அடிமை படுத்தி வைத்திருப்பதாகவும் ஒரு வேலை சோழர் ஆட்சி மீண்டும் வரபெற்றால் அங்கிருந்து ஒரு தூதுவன் வந்து அவர்களை மீண்டும் சோழ நாட்டிற்கு அழைத்து செல்வான் என்றும் மூதாதையோர் சொல்லியதை மனதில் வைத்து தூதுவனுக்காக காத்திருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அங்கு செல்லும் ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் கார்த்தி ஆகியோர் சோழர்களின் பிடியில் சிக்கி கொள்ள தான்தான் அந்த தூதுவர் என்று யாரும் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறார் ரீமாசென். ஆனால் உண்மையில் ரீமாசென் பாண்டிய குல வாரிசு என்பதும் அவர் அவர்களின் பரம்பரை சொத்தான நடராஜர் சிலையை மீட்கத்தான் வந்திருக்கிறார் என்பதுவும் நமக்கு தெரியும் போது தூக்கிவாரி போடுகின்றது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதை திரையரங்கில் சென்று கண்டு களியுங்கள்.........

என்னை பொறுத்தவரை படத்தின் ஹீரோ ரீமாசென்தான்........ சும்மா சொல்லகூடாது பின்னிருக்காங்க. பார்த்திபனுடன் இவர் ஆடும் மோகனர்த்தனம் அபாரம்........ பேச்சு நடை உடை பாவனை என அனைத்திலும் நம்மை கவர்கிறார்.......... அடுத்து பார்த்திபன்...... பார்த்திபனின் நடிப்புக்கு நல்ல தீனி போட்டிருக்கிறார் செல்வராகவன். மனிதர் முகபாவனைகளிலேயே உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறார் மேலும் பழந்தமிழை தெளிவாக பேசியிருப்பதும் பாராட்டுக்குரியது. அடுதுதாங்க நம்ம கார்த்தி..... கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் அவருக்கான காட்சிகளும் முக்கியத்துவமும் குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது........ ஆண்ட்ரியா எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கிறார்..... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்........

பின்னணி இசையிலும் பாடல்களிலும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். "நில்லாடிய நிலம் எங்கே" பாடல் அற்புதம்....... மீண்டு சொந்த நாட்டை காண எங்கும் ஏக்கம் அழகாக சொல்ல பட்டிருகிறது........ ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் பாராட்டுக்கு உரியவர்.....கலை இயக்குனர், சண்டை பயிற்சியாளர், ஆடை அலங்கார நிபுணர் என எல்லோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..... இவர்களை எளிதில் பாராட்டிவிட்டு கடந்து போக முடியாது....... படத்தை பார்க்கையில் இவர்களின் உழைப்பு நிச்சயம் உங்களுக்கு தெரியும்........... படத்தின் இறுதி காட்சிகள் ஈழப்போரை நினைவு படுத்துகின்றன........ எளிதில் மறக்க முடியவில்லை :(

செல்வராகவனின் இந்த கற்பனைக்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்....... யோசிப்பில் மட்டுமில்லாமல் அதை படமாகுவதிலும் அதே முனைப்பை காட்டியிருப்பது தெரிகிறது.......... ஒரு சில லாஜிக் கேள்விகள் இருந்தாலும் தமிழனை உலகறிய செய்யும் இப்படத்தை உருவாக்கியதற்கு தமிழ் சினிமா என்றும் கடமைப்பட்டிருக்கிறது ...................

செல்வராகவன் "ஆயிரத்தில் ஒருவன்" படம் "ஆயிரத்தில் ஒன்று" !

Tuesday, August 4, 2009

இசைஞானி இளையராஜா

இசைஞானியின் அபூர்வமான அதிசயமான அழகான பின்னணி இசைகளில் என்னை மிகவும் கவர்ந்த சில இசைத்துளிகள் இங்கே:

வருஷம் 16:


விஷ்வ துளசி:



இதயத்தை திருடாதே:




அழகி: