
நேற்று உறவினர் ஒருவரிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.
அவர் கேட்டார் "வேட்டைக்காரன் பாத்துட்டியாமே?".
"ஆம்" என்றேன்.
அதற்கு அவர் கூறினார் " இனிமேல் நீ எப்பொழுதும் வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது எங்களிடமோ வழக்கம்போல் உன் கோபத்தை காட்டக்கூடாது. எந்த காரியத்தையும் உடனே செய்ய சொல்லி அவசரப் படுத்த கூடாது.............. தைரியமான முடிவுகள் எடுக்கவும் தாமதிக்க கூடாது!"
"ஏன் திடீர்னு இதையெல்லாம் என்கிட்டே சொல்றீங்க?" என கேட்டேன்.
"இல்ல உனக்கு வேட்டைக்காரன் பாக்குற அளவுக்கு பொறுமையும் தைரியமும் இருக்கப்போ மத்த இடங்கள்ல எப்டி அது இல்லாம போகும்? ...... என்ன நான் சொல்றது சரியா?"
"சரீங்க்னா" என்றேன்.
"ஒரு வேளை சுறா ஹிட் குடுத்தா பாக்கலாம்ல?" என்று கேட்டேன்.
"சுறா வச்சு வேணும்னா புட்டு தரலாம் ஹிட் குடுக்க முடியாதுடா அம்பி!" னு சொன்னார்.
"சரி மாமா நான் அப்புறம் பேசுறேன்" என்று சொல்லி வைத்து விட்டேன். வேறென்ன சொல்வது?
மக்களின் எண்ணம் விஜய்க்கு மட்டும் ஏன் தெரிய மாட்டேங்குது? இதன் இப்போ மைண்ட்ல ஓடிட்டு இருக்க மில்லியன் டாலர் கேள்வி.
1 comment:
hehehe nice review :)
Post a Comment