Thursday, August 14, 2008

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு தமிழ் சிறுகதைகள் அடங்கிய பாடநூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கலாம் என எண்ணி ஆர்வமுடன் படிக்க தொடங்கினேன். அனைத்துமே அற்புதமான கதைகள், பெரும் நாவலாசிரியர்கள், தலைவர்கள் எழுதிய கதைகள். அதில் பல கதைகள் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை சுட்டி காடுவதாக இருந்தது. இதில் என்ன கொடுமை என்றால் இந்த பாடத்திட்டங்களை வைக்கும் இதே அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் அக்கிரமங்கள்தான் அக்கதைகள். இதை படிக்கும் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களுக்கு இதன் பொருள் புரியுமா? இல்லை இதையும் மனப்பாடமாக படித்து எழுதிவிட்டு போவார்களா? இல்லை வழக்கம் போல் இதையும் படிக்காமல் விட்டு விடுவார்களா? இல்லை படித்து நாட்டை பற்றி கவலை கொள்வார்களா?

இதில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு உதாரணத்திற்கு ஒரு மாணவன் இதை ஆர்வமுடன் படித்து நாட்டை பற்றி கவலை கொள்கிறான் என்றால் பின்னாளில் அவன் இன்னும் பல நிகழ்வுகளை காணும்போது இன்னும் கவலை கொள்வான். ஆனால் மற்றவர்கள் அவனுக்கு அன்னியமாக படுவார்கள். ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் தாமுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்கள். இதில் கூட தவறில்லை. ஆனால் இன்னும் ஒரு புற மக்கள் தான் யாரென்று காட்ட வேண்டுமென்று வாழ்கிறார்கள். இன்னும் சிலர் யார் எக்கேடு கேட்டாலும் சரி நாம் நல்லபடியாக வாழ்ந்தால் போதுமென்று நினைக்கிறார்கள். இதையெல்லாம் விட கொடுமை முதலீடு இல்லாத தொழிலாக அரசியலை எண்ணி நாட்டையே குட்டி சுவராக்கி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

இவற்றின் விளைவுகள்தான்,
* மணல் கொள்ளை
* காடுகள் அழிப்பு
* லஞ்சம்/ ஊழல்
* அரசுடைமைகளை அழிப்பது
* கொலை/கொள்ளை

வைரமுத்து கவிதை போல "வானின் நீளம் கொண்டு வா! பேனா மையும் தீர்ந்திடும்" என்னும் அளவிருக்கு இந்த அக்கிரம/அநியாய பட்டியல் நீளும்.

இதன் மூலம் கூற வருவது ஒன்று மட்டும் தான். தயவு செய்து இது போன்ற கதைகளை பாட புத்தகத்தில் புகுத்தி அந்த ஒன்றிரண்டு மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி விட்டு பின்னாளில் அவர்கள் சமூகத்தின் மேல் கோபம் கொண்டு அக்கிரமங்களை தட்டி கேட்க முடியாமலும் அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாமலும் நொந்து நொந்து சாக வேண்டாம். இப்படி ஒரு பாடநூல் அவர்களுக்கு தேவையில்லை. சாதாரணமான இலக்கணமும் இலக்கிய கதைகளும் போதும்...........
அதுதான் அவர்களின் கற்பனையோடு நின்று போகும்........

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

Wednesday, August 13, 2008

இலவச பாட நூல்கள்

தமிழக அரசின் கல்வித்திட்டத்தின் படி இயங்கும் அனைத்து பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்குமான அனைத் பாடநூல்களும் கீழ்வரும் இணைப்பில் இலவசமாக உள்ளது. முடிந்தவரை மற்றவர்களுக்கு தெரியப் படுத்துங்கள். பலருக்கு இது உதவிகரமாக இருக்கலாம்.

இணைப்பு: http://www.textbooksonline.tn.nic.in/

மேலும் சென்னையிலுள்ள சில வெளி நாட்டு தூதரகங்களுக்கான இணைப்புகள் கீழ்வருமாறு:

அமெரிக்க தூதரகம்: http://chennai.usconsulate.gov/
சிங்கப்பூர் தூதரகம்: http://www.mfa.gov.sg/chennai/
ஜெர்மன் தூதரகம்: http://www.chennai.diplo.de/Vertretung/chennai/en/Startseite.html