Tuesday, August 4, 2009

இசைஞானி இளையராஜா

இசைஞானியின் அபூர்வமான அதிசயமான அழகான பின்னணி இசைகளில் என்னை மிகவும் கவர்ந்த சில இசைத்துளிகள் இங்கே:

வருஷம் 16:


விஷ்வ துளசி:



இதயத்தை திருடாதே:




அழகி:

Wednesday, July 15, 2009

Nadodigal Review : நாடோடிகள் விமர்சனம்


படம் பார்த்து ரெண்டு வாரம் ஆச்சு.... ஆனா இன்னும் மனச விட்டு பிரியவே இல்ல...... சரி.... அப்போ விமர்சனம் எழுதிட வேண்டியதுதான்னு தோணிச்சு..... சும்மா சொல்ல கூடாதுங்க..... குடுத்த காசுக்கு மேலேயே சந்தோசத்தையும் நிறைவையும் தந்த படம்........ படத்த பத்தி பேசுறதுக்கு முன்னால சில இனைய தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் இந்த படத்த சிலர் படம் எடுத்தவருக்கு மேல விமர்சனம் பண்ணிருக்காங்க........ அதுல பாருங்க ஒருத்தர் சொல்றாரு, பருத்தி வீரன் படத்துல சின்ன சின்ன ரோல்ல நடிச்சவங்கல்லாம் கூட ரொம்ப நல்ல நடிச்சுருந்தாங்கலாம் ஆனா இந்த படத்துல அது ஒண்ணுதான் குறையாம்...... டேய் உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் என்னடா பிரச்சினைகள்? வீட்ல பிரச்சினை இருந்த வீட்டோட நிப்பாடிக்கங்கடா...... அத ஏன்டா வலைப்பதிவுக்கு கொண்டு வரீங்க? அவன் அவன் தமிழ்லையும் எவனாவது நல்ல எடுப்பானா எடுப்பானானு பார்த்து பார்த்து அத்தி பூத்த மாதிரி ஏதாவது ஒரு படம் வருது.... அதையும் படம் எடுத்தவனோட அதிகமா செலவு பண்ணி பார்த்த மாதிரி எழுதி தள்ள வேண்டியது......... சரி அத பத்தி பேசுனா நேரம்தான் விரயமாகும்..... முதல்ல சசி அண்ணாவுக்கும் சமுத்திரகனி அண்ணாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்......... அண்ணன்மார்களே! நீங்களாவது தரம் கெட்ட சினிமாக்களை எடுக்காமல் இது போன்ற மேலும் பல நல்ல திரைப்படங்களை எடுக்க வேண்டுகிறோம்......


கதைக்கு வருவோம்...... சசி, விஜய்[சென்னை-28ல நடிச்சாரே அந்த விஜய்ங்க), பரணி (கல்லூரில நடிச்சவரு) மூணு பேரும் இணைபிரியா உயிர் நண்பர்கள்....... மூவரும் வெவ்வேறு லட்சியங்களுடனும் கனவுகளுடனும் இருப்பதை காட்டி ஆரம்பிக்கிறது படம்........ சசியின் அத்தை பொண்ணுக்கு சசி மீது கொள்ளை ஆசை........ ஆனால் அந்த பெண்ணின் அப்பாவுக்கோ மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகம் பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்........ அத்தை பெண்ணுக்காக தன குடும்பம் நல்ல வசதியான நிலையில் இருந்தும் சொந்தமாக எதுவும் தொழில் பண்ணாமல் அரசாங்க வேலைக்கான தேர்வுகளை எழுதி தள்ளுகிறார்.......... விஜய்க்கு சசியின் சகோதரி மீது காதல்....... இதற்கு விஜயின் அப்பாவும் உடந்தை....... பிறகென்ன ஊரிலேயே சொந்தமாக கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி ஆரம்பித்து விட்டால் தனக்கென்று ஒரு அந்தஸ்து வந்துவிடும் பின் முறையாக பெண் கேட்டு நல்ல விதமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவாறே லோனுக்காக காத்திருக்கிறார்........ லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் அப்டீனு சொல்லுவாங்களே அந்த மாதிரி நம்ம பாண்டி. மனிதருக்கு ஒரு கவலையும் இல்லை......... நண்பர்களே உலகம் என்று அவர்களோடு வாழ்கையை கழித்து கொண்டிருந்தாலும் எப்படியும் துபாய் சென்று நன்றாக சம்பாதித்து வந்துவிட வேண்டும் என்பது இவரது ஆசை........

காதல், கலாட்டா கொஞ்சம் லட்சியத்தில் அக்கறை என்று அழகாக சென்றுகொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் வருகிறது ஒரு எதிர்பாராத ஒரு அதிரடி திருப்பம்....... சசியின் பழைய நண்பன் அதாவது அவரோடு ஊட்டியில் பள்ளியில் படித்த நண்பர் அவரை தேடி வருகிறார்........ அந்த பையனுடைய அம்மாதான் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வந்து இரண்டு நாட்களாக எதுவும் பேசாத அவர் அடுத்த நாள் திடீரென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அவரை காப்பாற்றி சசி காரணத்தை கேட்கையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஒரு பெரிய கோடீசுவரரின் மகளை காதலிப்பதும் அதற்கு அவரின் அம்மா சம்மதிக்காததும் தெரிய வருகிறது. நண்பன் மேல் கொண்ட பாசத்தில் சசி தான் அவர்களை சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கிறார். நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்று என்னும் சசியின் நண்பர்கள் தாங்களும் உதவுவதாக உறுதியளிக்க அதே கையோடு நண்பர்கள் நால்வரும் நாமக்கல்லுக்கு கிளம்ப சூடு பிடிக்கிறது படம்...........

நாமக்கல்லில் உள்ள நண்பர் (கஞ்சா கருப்பு) ஒருவர் மூலம் பெண்ணின் அப்பாவையும் அவரின் பலத்தையும் பற்றி தெரிந்து கொள்கின்றனர். தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கையில் அந்த பையனின் அம்மாவும் நாமக்கல்லுக்கு வந்து விட அதிரடியான ஒரு திட்டத்தின் மூலம் அந்த பெண்ணை ஒரு கோவில் வீதியில் வைத்தே தூக்குகிறார். அந்த பெண்ணையும் பையனையும் வண்டியில் ஏற்றி காப்பாற்ற முயற்சிக்கும் இந்த பரபரப்பான காட்சியில் சசி தாக்கடுகிறார். இருந்தும் அவர்களை காப்பாற்றி கிளம்புகையில் அவரோடு வண்டியில் வந்து ஏறி கொள்ள ஓடி வரும் நண்பர்கள் இருவரில் ஒருவர் (விஜய்) காலை இழக்கிறார், இன்னொருவர் (பாண்டி) தலையில் அடிபட்டு அதனால் காது கேட்கும் திறனை இழந்து செவிடாகிறார். போகும் வழியிலேயே நண்பர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு காதல் ஜோடிகளை நேரே ஒரு கோவிலில் கொண்டு சேர்த்து அங்குள்ள ஒரு நண்பனின் உதவியோடு திருமணமும் செய்து வைத்து அவர்களை சென்னைக்கு அனுப்பியும் வைக்கிறார்.

பின்பு நண்பர்களை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல நண்பர்கள் இருவரின் நிலையையும் பார்த்து கதறி அழுகிறார். இவர்கள் இங்கு இருப்பதை அறிந்து கொண்ட அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுக்க இவர்களை கைது செய்கிறது போலீஸ். போலீஸ் பல்வேறாக முயற்சித்தும் அவர்களிடமிருந்து காதல் ஜோடியயி பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சசியின் குடும்பத்தை தாக்குகிறார் அந்த பெண்ணின் தந்தை. ஒருவாராக ஜெயிலில் சில நாட்களை கடத்தி தங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் ஜெயிலில் இருந்து வெளியே வருகின்றனர். சசி ஜெயிலுக்கு சென்று வந்து விட்டதால் அவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்காது என்று அவரது மாமா தனது மகளுக்கு வேறொரு அரசாங்க வேலையிலுள்ள மாப்பிளைக்கு மணமுடித்து விடுகிறார். வாழ்வில் மேலும் மேலும் சோகம் சேர அவர்கள் வழக்கமாக அமர்ந்து பேசும் கடைகாரரின் மூலமாக நல்ல திருப்பம் ஆரம்பிக்கிறது. கல்யாண வேலைகளுக்கு சமையல் ஒப்பந்தம் செய்யும் வேலை கிடைக்க மூவரும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். விஜய்க்கு செயற்கை கால் பொருத்தப்படுகிறது பாண்டிக்கு காது கேட்கும் மெஷின் வர கொஞ்சம் தெம்பு வந்தவர்களாகின்றனர். இதற்கிடையே இவர்கள் மேல் பெண் வீட்டாரால் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்காக செல்லுகையில் மற்றொரு அதிரடி திருப்பம். உயிரை கொடுத்து சேர்த்து வைத்த காதல் கண்முன்னால் கேவலமான ஒரு காரணத்திற்காக பிரிந்து சென்றது மட்டும் இல்லாமல் அவர்கள் இருவரும் வேறு ஒரு திருமணத்திற்கு ஒப்பு கொண்ட சேதி அறிந்ததும் நண்பர்கள் கோபத்தின் உச்சிக்கு போய் இருவரின் வீடுகளுக்கும் சென்று அந்த பெண்ணிடமும் பையனிடமும் நியாயம் கேட்க போய் இருவராலும் அவமானப்படுத்தப் பட்டு திரும்புகின்றனர். நட்புக்ககாக வாழ்க்கையில ஏற்பட்ட இழப்புகளையும் வெறுப்புகளையும் எண்ணி ஆத்திரமடையும் அவர்கள் அந்த காதல் ஜோடியை கடத்தி வந்து கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அவர்களை கடத்தினார்களா? கொலை செய்தார்களா? இல்லை இவர்கள் எதுவும் ஆபத்தில் மாட்டி கொண்டார்களா? விறுவிறுப்பான இந்த உச்ச காட்சியை திரையில் கண்டு மகிழ்க..........


சசி படம் முழுவதும் அதிரடி நடிப்பால் கலக்குகிறார். "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாமா" என்று இவர் சொல்லும் இடங்கள் கை தட்டலை அள்ளும். பாடலில் நடனம் ஆடும் போது மட்டும்தான் இவர் தொழில்முறை கதாநாயகன் இல்லை என்பது நினைவுக்கு வரும் அளவிற்கு மற்ற அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகியாக வரும் அனன்யா பின்னி எடுத்திருக்கிறார். அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். இவர்களுக்கெல்லாம் மேல் சசியின் தங்கையாக வரும் அபிநயா, பெண்ணுக்கு காது கேட்காதாம் வாய் பேச வராதாம் ஆனால் இன்றைய தேதியிலிருக்கும் அனைத்து நடிகைகளையும் விட மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை மேலும் படங்களில் நடிக்க வைக்கலாம். விஜய் நிறைவாக செய்திருக்கிறார். சசியின் அப்பா, விஜயின் அப்பா, அனந்யாவின் அப்பா, பாண்டியின் அப்பா என எல்லா அப்பாக்களும் நடைமுறை வாழ்க்கையிலுள்ள வெவ்வேறு அப்பாக்களை அழகாக பிரதிபலித்துள்ளனர். கஞ்சா கருப்பு ஆங்காங்கே வந்தாலும் தவறாமல் சிரிக்க வைக்கிறார். நாமக்கல் பெண்ணின் அப்பாவாக வருபவரும் அற்புதமாக செய்திருக்கிறார். அவர் சசியை முதன் முதலில் பார்க்கையில் "தம்பிக்கு சௌத்சைடா" என்று கேட்கும் போது சசிக்கு மட்டுமல்ல நமக்கே நெஞ்சு பதைபதைக்கிறது. படத்தில் ஒரு அல்டிமேட் கேரக்டர் உண்டென்றால் அது அந்த அரசியல்வாதி அண்ணனாக வருபவரைதான் சொல்ல முடியும். "வாழ்விழந்த வாலிபர்களுக்கு வாழ்வளித்த வள்ளல்" என்று இவர் போஸ்டர் அடிக்கும் இடங்கள் சரவெடி சிரிப்பு.

பாண்டியை பற்றி தனியாக ஒரு விமர்சனமே எழுதலாம் என்கிற அளவுக்கு அலப்பரையாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அனந்யாவை சைட் அடிப்பதாகட்டும், நண்பர்களுடன் வரிந்து கட்டி கொண்டு இறங்குவதாகட்டும் கடைசியில் அனந்யாவின் தந்தையிடம் சசிக்காக சண்டை போடுவதாகட்டும் பிரமாதபடுத்தியிருகிறார். பாஸ்போர்ட் வெரிபிகேசனுக்காக பாண்டியை தேடி போலீஸ் வர அவரது அப்பா எங்கே பையன் ஏதோ தப்புதான் செய்திருப்பான் என நினைத்து போலீசிடம் பையனை கண்ணா பின்னவென்று திட்டுவதும் பின் விவரம் அறிந்ததும் அமைதியாகும் போது அவரை பார்த்து பாண்டி "இதுக்கு பேசாம சொத்துல விசத்த வச்சு கொன்றுலாம்ல" என்று கேட்கும் காட்சிகள் நெகிழ வைக்கும். கஞ்சா கருப்புவை இவை கலைக்கும் இடங்கள் அருமை. அவர் சசியை பார்த்து "நீ வலிச்சாலும் வலிக்கலேன்னுதானடா சொல்லுவ" என சொல்லும் இடம் சூப்பரோ சூப்பர்.

படத்தின் பின்னணி இசை பிரமாதம். சம்போ சிவ சம்போ பாடல் அதிர வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லா வசனங்களும் நினைவில் நிற்கிறது. ஒளிப்பதிவு படத்தொகுப்பு எல்லாமே கச்சிதம். படம் முடிந்து வெளியே வருவோரை பார்க்கையில் நெறஞ்ச மனசு எடுத்த சமுத்திரகனி இப்போதுதான் மனசுக்கு நிறைவாய் ஒரு படம் எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

Thursday, May 28, 2009

முன்னும் பின்னும்.....

பக்குவப்படாமல் இருக்கும் வயதில் காதல் கொண்டால்.......
அது ஒரு மாய உலகம்...... உவமைகள் யாவும் உண்மைகளாய் தெரியும்......
உற்றோர் உறவினர் தெரியாது...... சுற்றிலும் நடப்பது புரியாது.......
காத்திருந்த காலங்களை கணக்குப்போட்டு பார்க்க முடியாது......
உங்கள் பாதச் சுவடுகள் மட்டுமே உலகெங்கிலும் உள்ளதாய் உணர்வாய்.....
இயற்கையின் அழகை விட காதலி முகம் அழகாய் தெரியும்.....
உணவு தராத நிறைவை அவள் புன்னகை மட்டுமே தரும்.......
வீட்டிலிருக்கும் கஷ்டங்கள் தராத வலியை அவளது ஒரு சொட்டு கண்ணீர் தந்து விடும்......

பக்குவப்பட்டு பின் காதலும் வந்து விட்டால்......
காத்திருக்கும் பொழுது வீணாகும் நேரத்தை பற்றிய சிந்தனை ஆட்கொள்ளும்.....
அவள் மட்டுமே அழகு என பொய்யாகவாவது நீ சொல்வாய் என அவள் எதிர்பார்க்கையில்........ உலகிலேயே பெரிய எதார்த்தவாதியாக நீ மாறியிருப்பாய்....
திருமணம் செய்துகொள்ள அவள் அழுதாலும்....... அவள் கண்ணீருக்கு பின்னே உன் குடும்பம் கண்களாய் தெரியும்.....

பக்குவப்படாமல் காதல் கொண்டு பின் பக்குவப்பட்ட பின்பும் காதல் கொண்டால்....
வாழ்க்கையை எதிர் கொள்வது சற்றே கடினம்தான்......

Monday, May 4, 2009

படித்ததில் பிடித்து சிரித்தவை............

நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில்:

கேள்வி: நீங்கள் என் அரசியலுக்கு வரக்கூடாது?
பதில்: இல்லை.... எனக்கு சுமாராகத்தான் நடிக்க வரும்...... அந்த அளவுக்கு நடிக்க வராது......

நடிகர் பார்த்திபனின் கிறுக்கல்கள் தொகுப்பிலிரிந்து:

கேள்வி: எலக்சன்ல சீட் கிடைச்சா நிப்பீங்களா?
பதில்: சீட் கிடச்சா ஏன் நிக்கனும்..... நல்லா உக்காரலாமே........

சர்ச்சிலின் நகைச்சுவை:

சர்ச்சிலின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் சிறு பாலத்தைக் கடக்கும்போது எதிரில் வந்தவர் வழி கொடுக்காமல், "நான் முட்டாள்களுக்கு வழி கொடுப்பதில்லை" என்றாராம். சர்ச்சிலோ உடனே, "நான் முட்டாள்களுக்கு வழிவிடுவேன்" என்று சொல்லி வழி விட்டாராம்.



நடிகரும் இயங்குனருமான விஜய டி. ராஜேந்தர் ஒரு பேட்டியில்:

கேள்வி: வீராச்சாமிக்கு அப்புறம் என்ன படம் பண்றீங்க?

பதில்: என்னோட அடுத்த படம் ‘ஒருதலைக் காதல்’. 1979-ல் ‘ஒருதலை ராகம்’ எடுத்தேன். 2009-ல் ‘ஒருதலைக் காதல்’ எடுக்குறேன். இப்போ உள்ள யூத்து களுக்காக இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக் கேன். டப்பாங்குத்துப் பாட்டுக்களோட இன்னைய டிரெண்டுக்கு இறங்கி அடிக்கப் போறேன். இதுல ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல? இப்ப உள்ள ஹீரோக்களை என்னை மாதிரி ஆடிப் பாடச் சொல்லுங்க சார். தம் அடிச்சு யாருக்குமே தம் இல்லை.

‘வீராச்சாமி’யில நான் ஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க சார். உங்களை மாதிரி சில பேர்தான் ‘ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?’ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்) ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக ‘டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்’னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல… அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!

Sunday, March 8, 2009

கண் (கண்ட) காட்சிகள்:

சின்ன வயசுலேர்ந்து போட்டோ புடிக்கனும்னு ரொம்ப ஆசைங்க்னா...... அந்த ஆர்வ கோளாரோட விளைவுகளைதாங்க்னா கீழ பாக்குறீங்க:

மீன் புதையல்



அமைதியில் உறங்கும் ஆழி:


அந்தியில் உற்சாகத்துடன்:


மாவீரன் கார்த்திகேயன் [பின்ன நடுகடல்ல குதிக்கிறதுன்னா சும்மாவா?]


துபாய் 1:


துபாய் 2:


துபாயில் ஒரு பனிக்காலம்:

நீங்க மேல பார்த்த அதே லோகேசன் தாங்க்னா....... கொஞ்சம் பனி ஓவர் ஆகிடுச்சு......



Wednesday, March 4, 2009

பூரி கிழங்கு போடு!!!!!

ஹாலில் சோபாவில் ஹாயாக சாய்ந்து கொண்டு டி.வி பார்த்து கொண்டிருந்தான் பிரேம்.

"என்னங்க காலைல பூரி பண்ணிடுறேன்...... கூட கிழங்கு மசால் ஓகே தானே? " கேட்டாள் பிரேமின் மனைவி.

பிரேமின் மனதில் பிளாஷ்பேக் வேகமாக ஓடியது........

**************************************************

"மாப்ளே இதுக்கு மேல இத இப்டியே விட கூடாதுடா" என்றான் ரவி.

"இதாண்டா சரியான டைம்...... எல்லாரும் ரெடியா இருக்காங்க... சோ இப்போ நம்ம பண்ணத்தான் கரெக்டா இருக்கும்" இது சசி.

எல்லாவற்றையும் கூர்ந்து கேட்டு கொண்டிருந்த பிரேம் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. "ஒ.கே நைட் பத்து மணிக்கு பசங்கள நம்ம ஹாஸ்டல் மொட்ட மாடிக்கு வர சொல்லிடு. இன்னைக்கு நைட்டே பிளான் பண்ணிடலாம்".

இரவு பத்து மணி. மொட்டை மாடி.

நீண்ட நேர கலந்துரையாடலுக்கு பின்பு பிரேம் சொன்னான், "நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு எல்லாரும் டி.வி.எஸ் டொல்கேட் சிக்னல்ல ஸ்டார்ட் பண்றோம். எல்லாரும் கரெக்டா வந்திருங்க நம்ம யாருன்னு எல்லாருக்கும் காட்றோம்".

அப்பொழுது "மாப்ளே பேனர் ரெடி பண்ணனும்டா! அப்போதாண்ட மாப்ளே நம்ம வெயிட் காமிச்ச மாதிரி இருக்கும்! " என்றான் ரவி.

"சூப்பர் ஐடியாடா..... கலக்குரடா மாமு" என்று ஆமோதித்தான் சசி.

பிரேம் ஸ்டைலாக திரும்பி சொன்னான், "வாழ்க்கைல இப்போதண்டா உங்க வாய்ல இருந்து நாலு நல்ல ஐடியா வருது. ஒ.கே நாளைக்கு அடிக்கிறோம்.... கலக்குறோம்.....".

அடுத்த நாள். காலை ஒன்பது மணி. டி.வி.எஸ் டொல்கேட் சிக்னலை நோக்கி மாணவர் கூட்டம் படையெடுத்தது. அனைவரும் மொத்தமாக சென்று சிக்னலின் நடுவில் அமர்ந்து மறியல் செய்ய தொடங்கினர்.

அனைவர் கைகளிலும் "பூரி கிழங்கு போடு", "இனிமேல் போடணும் பூரி....... இல்லையெனில் நிரவ்கத்தை துப்புவோம் காரி...... ", "சத்து உள்ளது சப்பாத்தி....... அடைதி வழங்கி மாணவர் நலன் காப்பாத்து.......", இனிமேல் போடாதே இட்லி...... போட்ட நீ ஆகிடுவே சட்னி" என்று வித விதமான பேனர்கள். இது போதாதென்று கோஷங்கள் வேறு. அதுவும் எப்படி "இட்லி தோசை போடாதே..... பூரி கிழங்கு போடு......." என்று.

போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து விட்டது. பாவம் முக்கியமான சிக்னல் என்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னை, புதுகோட்டை, மதுரை, சென்னை என்று நான்கு முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் பிரியும் நான்கு சாலைகள் பிரியும் சிக்னல் அது. சிறிது நேரத்தில் காவல்துறையினர் பறந்து வந்தனர்.

போலீஸ் அதிகாரிகள் மாணவர்களிடம் பேசிய வண்ணம் இருந்தனர். ஆனால் ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி கேட்டார் "ஏன்பா தம்பிகளா இப்டி பண்றீங்க...... இதுக்கெல்லாமா மறியல் பண்றது..... பாவம் ஜனங்க அவஸ்தை படுறாங்கள்ள..... கலைஞ்சு போய்டுங்கப்பா". கூட்டத்திலிருந்து சசி வேகமாக எழுந்தான் "யோவ்.... உங்க வீட்ல வாழ்க்கை புல்லா இட்லி தோசை மட்டுமே காலைல போட்டா சாப்டு போயிடுவியா....... வக்கனயா கேள்வி மட்டும் கேக்குற?" என்றான்.

இன்னொரு போலீஸ் அதிகாரி சொன்னார், "மாணவர்களே உங்கள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்.... அடுத்த வாரம் முதல் உங்களுக்கு வெவ்வேறு வகையான காலை உணவுகள் வழங்கப்படும். நாங்கள அதற்கு உறுதி அளிக்கிறோம். இல்லையென்றால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்திகொண்டிருப்பதால் உங்கள் மேல் தடியடி நடத்த வரலாம் மேலும் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க வேண்டி வரலாம். எனவே நீங்கள் இப்பொழுது அமைதியாக கலைந்து செல்லலாம்.".

ரவி மெதுவாக பிரேம் காதில் ஓதினான், "மாப்ளே நம்மள மிரட்டி பாக்குறாங்க....... இவிங்க நம்மள ஒரு மயிரும் புடுங்க முடியாது........ நம்ம மேல கை வைக்கவும் முடியாது..... கூட்டத்த கலச்சொம்னா அவ்ளோதான்...... நம்மள ஈசியா ஏமாத்திட்டு போய்டுவாங்க..... இன்னொரு நாளைக்கு ஒரு பயலும் வர மாட்டங்க எவனும் நம்மள மதிக்கவும் மாட்டாங்க....."

போலீஸ்காரர்கள் எவ்வளவோ பேசியும் பயனிருப்பதாக தெரியவில்லை. முடிவாக போலீசார் சொன்னார்கள், "உங்களில் யாரேனும் மூன்று பேர் மட்டும் எங்களுடன் வாருங்கள். நாங்கள் உங்களை கலெக்டரிடம் அழைத்து செல்கிறோம். அங்கு நீங்களே பேசி உங்கள் குறையை தீர்த்து கொள்ளுங்கள்.". இது ஓரளவுக்கு திருப்தியான பதிலாக தெரிந்ததால் மாணவர்கள் சற்றே யோசிக்க தொடங்கினர். பிரேம், சசி, ரவி மூவர் முகத்திலும் பிரகாசம் தெரிந்தது. அவர்கள் மூவரும் வருவதாக போலீசாரிடம் கூறினர்.

அவர்களை ஏற்றிக்கொண்டு வண்டி நேராக பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு போனது. மூவர் முகத்திலும் சற்றே பயம் வந்திருந்தது. உள்ளே ஒரு போலீஸ்காரர் கேட்டார், "இவிங்கதான சார் அவிங்க.... ரொம்ப வித்தியாசமான போராட்டமா இருக்கே..... இங்க உள்ள அனுப்புங்க அவிங்கள" என்றார்.

மூவரும் உள்ளே அனுப்ப பட்டனர். "இதுல யாருப்பா தலைமை, யாரு பொருளாளர் செயலாளர்?" என்றார்.

"விசாரிச்சோம் சார்.... பிரேம் தான் தலைவராம்" என்றார் இன்னொரு போலீஸ்காரர்.

"அய்யா பிரேம் இப்படி வாங்க...... இட்லி தோசையெல்லாம் சாப்பிட மாட்டீங்களா? பூரி கிழங்குதான் வேணுமோ? பின்னாடி திரும்புடா" என்று திருப்பி லத்தியால் நான்கு வாங்கு வாங்கினார்.

****************************************


பிரேம் அலறினான் "ஐயோ... அம்மா... பூரி கிழங்கேல்லாம் வேணம் சார்.... இட்லி தோசையே போதும்"

"இப்ப எதுக்குங்க இப்டி அலர்றீங்க? ஆமா என்னை எதுக்கு சார்னு சொன்னீங்க? அப்போ பூரிக்கு சென்னா மசாலா பண்ணிடவா?" என்று கேட்டாள் பிரேமின் மனைவி.

பதிலேதும் பேசாமல் விழித்தான் பிரேம்.................

Monday, February 23, 2009

கோபம் - நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து.............

யாராவது நம்மைப் பார்த்து 'சோம்பேறி', 'நீ எதற்கும் லாயக்கி இல்லாதவன்', 'உன்னால் ஒரு புரியோஞனமும் கிடையாது' என்பது போன்ற வார்த்தைகளைக் கூறினால் நம்முள் பயங்கரமாக கோபம் வருகிறது. நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி சொன்ன வார்த்தையைய் ஒரு போதும் யோசிக்கவும் மாட்டோம், நம்மைப்பற்றி கூறியது என்று எடுத்துக் கொள்ளவும் மாட்டோம்.

இவ்வாறாக இன்னொருவரை திட்டும் போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால்... திட்டப்பட்டவர் அவர் கூறிய ஏதாவது ஒரு குணம் உடையவராகத்தான் இருக்கும்.அப்படியாக இல்லாமல், இவர் நம்மைத் திட்டி விட்டாரே அது எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என்று நினைத்தால் தான் 'கோபம்' வருகிறது, இரத்த அழுத்தம் கூடுகிறது, இதயத் துடிப்பின் படபடப்பு அதிகரிக்கிறது, வார்த்தைகளில் தெளிவின்மை காணப்படுகிறது.

ஆகையால் நம்மைப் பற்றி யார் எது சொன்னாலும் அமைதியாக ஏற்றுக் கொண்டு நாம் அந்த வார்த்தைகளுக்கு பொறுத்தமானவரா என்று சற்று யோசிப்போம். இல்லையென்றால் அந்த வார்த்தைகளை கூறியவரையே சாறும்.

நாம் ந‌ம்மைப்ப‌ற்றி தெளிவாக‌ இருந்தோமானால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌டுமையான‌ வார்த்தைக‌ளுக்கு இட‌மேது?????

Monday, January 12, 2009

அவமானம்

முதன் முதலாக துபாய் செல்லும்போது நிகழ்ந்த சம்பவம் இது. சென்னையிலிருந்து நேரடியாக டிக்கெட் கிடைக்காததால் சென்னை-மும்பை மும்பை-துபாய் செல்லுமாறு முன்பதிவு செய்திருந்தேன். இரவு எட்டு முப்பதுக்கு மும்பைலிருந்து விமானம். காலை ஆறு மணிக்கெல்லாம் சென்னையிலிருந்து கிளம்பி மும்பை சென்று அங்கிருக்கும் சில நண்பர்களையும் சந்தித்து விட்டு மாலை மும்பை விமான நிலையம் சென்றடைந்தேன். வழக்கமான பரிசோதனைகள் எல்லாம் முடிந்து விமானத்தில் வந்து அமர்ந்தேன். என்னுடைய இருக்கை சன்னலோர இருக்கையாக இருந்தது. எனக்கு அருகில் ஒரு பத்து வயது மதிக்கதக்க சிறுவனும் அவனுக்கருகில் ஆறு வயது நிரம்பிய சிறுமியும் இருந்தார்கள். அவர்களது பெற்றோர் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தனர். அந்த சிறுமி தன்னுடைய அண்ணனிடம் சன்னலோர இருக்கை வேண்டுமென அடம்பிடித்து கொண்டிருந்தாள். எனக்கு நானும் என் தங்கையும் இருந்த சிறுவயது ஞாபகம் வந்தது அதுமட்டுமின்றி அச்சிறுமியை பார்க்க பாவமாய் இருந்ததால் நான் அந்த சிறுவனிடம் கூறினேன் "வேண்டுமானால் என் இருக்கையை உன் தங்கையை எடுத்து கொள்ள சொல். நான் அடுத்த இருக்கைக்கு மாறிக்கொள்கிறேன்". அதற்கு அந்த சிறுவன் கூறினான், "நான் எப்படி என் தங்கையை வேறு ஒருவன் பக்கத்தில் அமர வைக்க முடியும்?".