Monday, October 27, 2008

மாமு கதைகள்

ரிச்சர்ட், அருண், கார்த்தி, லாரன்ஸ், ஹேமந்த், வசந்த் இது எங்கள் கல்லூரி நண்பர் குழு. இதில் "மாமு" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் லாரன்ஸ் அடித்த கூத்துகளை பட்டியலிடலாம். அதில் ஒன்று உங்களுக்காக...........

மதியம் ஒரு மணி..... கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பாய் கடை..... நாங்கள் அனைவரும் அங்கே ஆஜர்...

"பாய் ஒரு டீ" இது ஹேமந்த்.

என்னடா மாமு இப்பல்லாம் ஏரியாவுல எதுவும் பிரச்சனைகளுக்கு போறதில்லயாடா? இது நான்.

"இல்லடா.... கடைசியா ஒருத்தன் மூஞ்சிய ஒடச்சது... அதுக்கப்புறம் பிரச்சனைகளுக்கெல்லாம் போறதில்ல....." இதான் மாமு......

ரிச்சர்ட், அருண், கார்த்தி அனைவரும் சிரிப்பை அடக்க முயல்வதை பார்த்து ஹேமந்த் சிரிக்க...... சிரிப்பு தாளாமல் ஹேமந்த் கையிலிருந்த டீ அருகில் இருந்தவர் மேல் ஊற்றி விட்டது..... அவர் பக்கத்து கடைக்காரர்தான்..... கோபமாய் ஹெமந்த்தை பார்த்து கேட்டார் "அறிவு இல்ல.... இப்டித்தான் கண்ணு மண்ணு தெரியாம திரிவீங்கலடா?".

அன்று பார்த்து ஹேமந்த் கோபபட்டு விட்டான்...... "யோவ் அதான் சாரி சொல்றோம்ல.... அப்புறம் என்ன எகிர்ற?".

அவர் ஒரு படி மேலே மேலே போய் ....."சாரி சொன்ன...... பாடு..... என்னடா சௌன்ட் விடுற? பன்றதையும் பண்ணிட்டு என்னை பார்த்தா எகிர்ரனு கேக்குற? "

ஹேமந்த் எழுந்து விட்டான்.... நாங்கள் எல்லாம் பதறி போய் இருவரையும் தடுத்தோம்...... "ஏரியால இருக்க மாட்ட" என்று பக்கத்து கடைகாரர் மேலும் சத்தம் போட..... ஹேமந்த் சொன்னான் "சாயங்காலம் பாக்கலாம் யாரு இருப்ப இருக்க மாட்டான்னு" என்று பதிலுக்கு பேச..... ஒரு வழியாக நாங்கள் சமாதான படுத்தி அழைத்து வந்தோம்.....

திரும்பி வரும் போது கார்த்தி கேட்டான் மாமுவிடம்.... "ஏன்டா மாமு பேசாமல் வந்துட்ட..... நீ இருக்கும் போதே எரிய கீரியானு பேசுறான்...... பேசாம விட்டுட்டு வந்துட்ட".....

இதற்கு மாமுவின் பதில் "ஒரு போன் போதும்.... ஆளே இல்லாம போய்டுவான்..... அது மேட்டர் இல்ல".....

"அப்பறம் என்ன போன் பண்ண காசு இல்லையா?" கார்த்தியின் வழக்கமான நக்கல் கேள்வி..... ஆனால் இதை அறியாத அப்பாவி மாமு வழக்கம் போல் சீரியசாக பதில் சொன்னான் "காமெடியா...... போலீஸ் கேஸ் ஆகிரும்னு பார்த்தேன்...... இல்லைனா ஒரு போன் போதும்.... ஆளே இருக்க மாட்டான்".

ஒரு வழியாக வகுப்பிற்கு வந்தோம்...... ஆனால் ஹேமந்த் வரவே இல்லை......
அவனும் லோக்கல் ஏரியா தான்..... அதனால் அவனுக்கு தெரிந்தவர்களை கூப்பிட சென்று விட்டான்.... ஆனால் இந்த விவரம் எங்களுக்கு தெரிய வில்லை....

மாலை ஐந்து மணி. வழக்கமான கல்லூரி தேநீர் இடைவேளை. நாங்களும் வழக்கமான பாய் கடையில் டீ, வடை, சமொசாக்களுடன்.........

பக்கத்து கடைகாரரும் வந்திருந்தார்...... எங்களை முறைத்தவாரே டீ குடித்து கொண்டிருந்தார்..... அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது..... திடீரென ஹேமந்த் அவனது லோக்கல் நண்பர்கள் நான்கைந்து பேருடன் வந்திறங்கினான்...... அனைவரும் பக்கத்து கடைக்காரரை ரவுண்டு கட்டி சத்தம் போட தொடங்கினர்........
கண்டிப்பாக சண்டை வந்துவிடும் போல தெரிந்தவுடன் கட்யிலிருந்த பலர் வெளியேறி விட்டனர்...... பாவம் பாய் அந்த களேபரத்திலும் எங்களுக்கு அறிவுரை சொல்லி கொண்டிருந்தார்...... ஒரு வழியாக கஷ்டப்பட்டு சண்டையை தடுத்து விட்டோம்..... அப்போதுதான் கவனித்தால் கூட்டத்தில் மாமு இல்லை...... எஸ்கேப்....
எங்கே என்று பார்த்தால் ரோட்டுக்கு எதிர்ப்புறம் சென்று நின்றிருந்தான்.

எங்களை பார்த்து "கிளாஸ் டைம் ஆகிடுச்சு.... வரலையா?" என்று கேட்டு விறு விறுவென நடந்து சென்று விட்டான் மாமு.

அடுத்த நாள் மாலை நான் லாஸ்ட் கிளாஸ் கட் அடித்து விட்டு வந்து பாய் கடையில் அமர்ந்தேன்....... பாய் வழக்கம் போல் அறிவுரை சொல்லியவர் டீ போட்டு குடுத்தார்..... "வீட்ல எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வக்கிறாங்க..... நீங்க என்னடான்னா கிளாஸ் கட் அடிச்சுட்டு இங்க வந்து வெட்டியா உக்காந்து இருக்குறீங்க"........ பாய் சொல்வதில் ஐம்பது சதவீதம் கேட்டிருந்தால் கூட நாங்கள் வாழ்வில் இன்னும் பெரிய இடத்தில் இருந்திருப்போம்......பாவம் பிழைக்க தெரியாத பாய்..... பக்கத்து கடைக்காரரை போல் கூட்டம் சேர்க்க தெரிய வில்லை.... பெரிய ஸ்பீக்கர் வைத்து அஜித்/விஜய் பாடல்கள் போட தெரியவில்லை.......

அப்போதுதான் அங்கு வந்தான் மாமு...... அவனும் கட் அடித்து விட்டான் போல......

நான் மெதுவாக கேட்டேன் "என்னடா மாமு..... ஏரியால பெரிய ரவுடிங்குற..... ஈவ்னிங் ப்ரேக்ல அவ்ளோ பெரிய கலவரம் நடக்குது நீ பாட்டுக்கு பேசாம கிளாஸ் போறேன் போய்ட்ட....."

மாமு ஸ்டைலாக திரும்பி பதில் சொன்னான் "வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேச கூடாது ஒ.கே வா...... இன்னைக்கு மத்தியானம் பக்கத்து கடைகாரரும் பத்து பேரை கூட்டிட்டு வந்தார்..... நீங்க யாருமில்லை..... நான்தான் பேசி அனுப்பி வச்சேன்......"

தொடரும்..........

2 comments:

Ganesh said...

nice narration. whatever you wanted to convey, i am reminded of my college days and i miss them very badly still.

college friends range-a vera da kt. நான் கூட work-la team members-உடன் college friends மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டேன் - ஏமாற்றம் தான் மிச்சம்.

Unknown said...

ha ha ha...sema sooper da...
there should be one MAMU in every coll or in every group...