Sunday, November 23, 2008

மாமுவின் மினி ப்ராஜெக்ட்

அது மூன்றாம் செமெஸ்டர் ஆரம்பித்த நேரம். எல்லோரும் ஒரு மினி ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் மேலும் அதற்கான அறிவிப்புகள் மற்றும் யாருக்கு யார் கைடு என்பது முதலான விவரங்கள் வந்து விட்டன. எல்லோரும் இன்னும் மூன்று நாட்களுக்குள் தலைப்புகள் கொடுத்தாக வேண்டும். எல்லோரும் மண்டையை பிய்த்து கொண்டிருந்தோம்.

வழக்கமான பாய் டீ கடை:

"மாமு மினி ப்ராஜெக்ட் டைட்டில் ரெடி பண்ணிடியாடா?" இது கார்த்தி.

"இல்லடா...... எதுல பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்...... ரிச்சர்ட் நீங்க எதுல பண்ண போறீங்க? " மாமு நக்கலாக கேட்டான்.

"கம்பியூடர்லதான்"..... சொல்லி விட்டு ரிச்சர்ட் டீ குடிப்பதை தொடர்ந்தான். எல்லோரும் சிரிப்பை அடக்க ரொம்ப கஷ்டப்பட்ட நேரத்தில் மாமு சொன்னான்,

"ஒ! காமெடியா.... நாளைக்கு டைம் இருந்தா மார்னிங் எட்டு மணிக்கு சிரிக்கிறேன்! "
இப்போது சிரிப்பு வரவில்லை...... ஆனால் முன்பு அடக்கிய சிரிப்பு இப்போது நன்றாக வெளிவந்தது....... பாவம் அப்பாவி மாமு வழக்கம் போல் நம்முடைய காமெடிக்குதான் எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று நினைத்தவாறே எல்லாரையும் மிகவும் பந்தாவாக சுற்றி பார்த்தான். இப்போது சிரிப்பு மிக அதிகமானது. ஆனால் மாமுவுக்கு தெரிய வில்லை அவனது ரியாக்சானுக்குதான் இந்த சிரிப்பு என்று.

மாமு மேலும் ஸ்டைலாக கார்த்தியை பார்த்து சொன்னான் "பெரிய சிட்டிசன் அஜித்..... ஹா ஹா ஹா நு சிரிக்கிறாரு" ...... ஆனால் இப்போது இன்னும் அதிகமானது சிரிப்பு.

நான் சிரிக்காமல் கேட்டேன்.... எனென்றால் நான் மிகவும் நல்லவன் அவர்களை போல் இல்லை என்பதும் மாமுவின் எண்ணம். "மாமு எப்டிடா உன்னால மட்டும் இப்டி பஞ்ச் அடிக்க முடியுது? "

கார்த்தி அதாண்டா திருமலைல விஜய் சொல்லுவான்..... "பூமி ஒரு வட்டம்.... இங்க இன்னைக்கு ஒருத்தன் ஜெயிப்பான்..... நாளைக்கு ஒருத்தன் ஜெயிப்பான்... இத நீ இன்னும் புரிஞ்சுகல...... உனக்கு கூடிய சீக்கிரம் புரிய வைக்கிறேன்" நு சொல்வான்ல அப்டித்தான் அவன் பஞ்ச் அடிச்சான் நான் அவனுக்கு டின்ச் குடுத்தேன்.

"இது திருமலை விஜய் டயலாக் இல்ல.... கருமலை அஜய் டயலாக்...... திருமலைல இப்டி ஒரு டயலாக் இருக்கது விஜய்க்கே தெரியாது" இது வசந்த்.

"டாபிக் மாத்தாதீங்கடா..... மாமு உன்கிட்ட என்ன கேட்டோம்.... மினி ப்ரோஜெக்ட்கு எல்லாம் ரெடி பண்ணிட்டியா......." கார்த்தி கேட்டான்.

"ரெடி பண்ணிட்டே இருக்கேன்"........

இதன் பின் பலநாள் மாமு கம்ப்யூட்டர் லேபில் வேட்டியாயகத்தான் உக்கார்ந்து இருந்தான். திடீரென்று மாமுவின் சிஸ்டத்தில் ஒரு நாள் ப்ராஜெக்ட் ரன் பண்ணி காட்ட நாங்கள் அதிர்ந்து போனோம். பின்புதான் தெரிய வந்தது எங்கள் கம்ப்யூட்டர் லேப் அட்மினுடைய சென்டெரில் பீஸ் கட்டி ப்ராஜெக்ட் பண்ணியதால் அவனுடைய ப்ரொஜெக்டை அவர் உதவியுடன் நேரடியாக லேபில் உள்ள அவனுடைய கம்ப்யூட்டரில் ஏற்றி விட்டான். இதே போல் பண்ணிய பலரில் ஒருவர் மூலமாக எங்களுக்கு இது தெரிய வந்தது.

அடுத்த நாள் லேபில் மாமுவிடம் கேட்டோம், "மாமு ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ணிட்டியா?".......... மாமு பதில் சொல்லாமல் நேரடியாக ப்ரொஜெக்டை ரன் பண்ணி காண்பித்தான். எங்களுக்கு தெரியும் அது மாமு பண்ணவில்லை என.
ஆனால் மாமு சின்சியராக ஏதோ செய்து கொண்டிருந்தான். என்னவென்று பார்த்தால் வி.பி யில் டைமரை இழுத்து பெரிதாக்கி பார்த்தான். என்னடா என்று கேட்ட பொழுது "பார்த்தா தெரில..... டைமரை பெருசாக்கிட்டு இருக்கேன்" என்று சொல்லி விட்டு வேலையே தொடர்ந்தான். பாவம் அப்பாவி மாமுவுக்கு கடைசி வரையிலும் தெரியவே இல்லை டைமரை பெரிதாக்க முடியாது என..........

No comments: