Thursday, May 28, 2009

முன்னும் பின்னும்.....

பக்குவப்படாமல் இருக்கும் வயதில் காதல் கொண்டால்.......
அது ஒரு மாய உலகம்...... உவமைகள் யாவும் உண்மைகளாய் தெரியும்......
உற்றோர் உறவினர் தெரியாது...... சுற்றிலும் நடப்பது புரியாது.......
காத்திருந்த காலங்களை கணக்குப்போட்டு பார்க்க முடியாது......
உங்கள் பாதச் சுவடுகள் மட்டுமே உலகெங்கிலும் உள்ளதாய் உணர்வாய்.....
இயற்கையின் அழகை விட காதலி முகம் அழகாய் தெரியும்.....
உணவு தராத நிறைவை அவள் புன்னகை மட்டுமே தரும்.......
வீட்டிலிருக்கும் கஷ்டங்கள் தராத வலியை அவளது ஒரு சொட்டு கண்ணீர் தந்து விடும்......

பக்குவப்பட்டு பின் காதலும் வந்து விட்டால்......
காத்திருக்கும் பொழுது வீணாகும் நேரத்தை பற்றிய சிந்தனை ஆட்கொள்ளும்.....
அவள் மட்டுமே அழகு என பொய்யாகவாவது நீ சொல்வாய் என அவள் எதிர்பார்க்கையில்........ உலகிலேயே பெரிய எதார்த்தவாதியாக நீ மாறியிருப்பாய்....
திருமணம் செய்துகொள்ள அவள் அழுதாலும்....... அவள் கண்ணீருக்கு பின்னே உன் குடும்பம் கண்களாய் தெரியும்.....

பக்குவப்படாமல் காதல் கொண்டு பின் பக்குவப்பட்ட பின்பும் காதல் கொண்டால்....
வாழ்க்கையை எதிர் கொள்வது சற்றே கடினம்தான்......

2 comments:

Venkatesh R said...

தாங்கள் எந்த காதலை விரும்புகிறீர்கள்?

Mylsamy said...

Great man You are correct.
I love it.

Thanks for this wonderful lines!!!